பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 24 பொய்ம் முகங்கள் னாலே அப்படி ரெண்டு முகத்தோட இருக்க முடியாது. ஒரு பொருள்முதல்வாதிக்கு ஆதீனச் செலவிலே நீங்க சம்பளம் கொடுக்கிறதோ நான் வாங்கறதோ நல்லா யிருக்காது...' - "அதை முடிவு செய்ய வேண்டியவன் நான்தான் சுதர்சனம். என்னை யாரும் மிடத்திலே தட்டிக் கேட்கப் போறதில்லே...' - - - 'இருக்கலாம். ஆனா ஆத்திகனுடைய-ஆத்திக ஸ்தாபனத்தினுடைய செலவிலே நான் நாத்திகப் பிரச்சாரம் செய்யமாட்டேன்.' - - - "இதுக்கு என்னா அர்த்தம் சுதர்சனம்? நான் இப்போ அப்படிச் செய்துகிட்டிருக்கேன்னு அர்த்தமா?” - "அதை விவாதிக்க நான் இங்கே வரலிங்க! நீங்க. கூப்பிட்டனுப்பிச்சிங்க. வந்தேன். இலக்கிய மன்றக் கூட்டத் துக்கு ஏன் நான் வரலேன்னு காரணம் கேட்டீங்க. சொல் லிட்டேன்? நான் வரேன்' என்று கூறிவிட்டுச் சரேலென்று எழுந்து அவர் விடை கொடுப்பதற்குக் கூடக் காத்திராமல் சுதர்சனன் அங்கிருந்து வெளியேறிவிட்டான். அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியாது. மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாகத், தலைமையாசிரியர், அவனைத் தேடி வந்தார். பெரிய கும்பிடாகப் போட்டார். . . . . . . 'நடந்த அ. ச. ம். பா வி தங்க ளு க் கா. க எங்களை ரொம்ப மன்னிக்கனும். அடிகளார், ஆனந்தமூர்த்தி எல்லோருமாகச் சேர்ந்து ஜமீன்தார்வாள்கிட்டச் சொல்லி ஜமீன்தார்வாளும் உடனே என்னைக் கூப்பிட்டு உங்களை மறுபடி ஸ்கூல்லே f இன்ஸ்டேட்' பண்ணச் சொல்லிட்டா. டெர்மினேஷன் ஆர்டரை உடனே கேன்சல் பண்ணிடறேன். உடனே நீங்க எப்பவும்போல இன்னிக்கே மறுபடி