பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 237 "சின்ன விஷயங்களிலேயே திருப்தியடைஞ்சு வாழ்வில் மேற்கொண்டு எதுவும் முயலாமல் பிரயத்தனத் தற்கொலை வண்ணிக்கிறவங்களுக்கு அதுசரிதான்! என்னாலே அது முடி, யாது. கடைசி விநாடி வரை அடுத்த மேல் படியிலே ஏறியா கனும்கிற போராடும் குணமுள்ள வாழ்க்கையைத் தேடி முயன்று வாழவிரும்பறவன் நான். தமிழ் தெரியாதவன் முதல் போட்டுத் தரம் தெரியாதவன் அதிகாரம் பண்ணி நடத்தற பத்திரிகையிலே என்னை மாதிரி ஆளாலே காலந் தள்ள முடியாது. அப்படி வேல்ை எனக்கு ஒருநாளும் ஒத்து வரவும் வராது. . "எனக்கே தட்டிச் சொல்ல முடியாத சிபாரிசு இருந்த தாலே தான் இந்த வேலை கிடைச்சது. இல்லாட்டி காவி' அவருக்கு வேண்டிய யாரையாவது நியமிச்சு அதிலேயும் ஏதாவது கமிஷன் அடிச்சிருப்பாரு. - "அதென்ன கமிஷன் அடிக்கிறது? முன்னாடி எண்ணெய், மொளகாய், உப்புப் புளி பருப்புக்குத்தான் கமிஷன் மண்டிங்க இருந்திச்சு. இப்போ பத்திரிகை ஆபீஸுங்களும் கமிஷன் மண்டி மாதிரி ஆயிடுச் சாக்கும்?' . . . . - அதுக்கு ஆரம்ப முகாம் உங்க ஆபீஸ்தானா? இனிமே தான் மத்ததுக்கும் அது மெல்ல மெல்லப் பரவும்' என்று. கூறிவிட்டுச் சுதர்சனனே மேலும் சொல்லலானான்: நான் தான் அப்பவே சொன்னேனே, பூர்ஷ்வா சமூக அமைப்பிலே எல்லா விவகாரங்களிலும் இடைத்தரகர்களும் கமிஷன் ஏஜண்டுகளும் உழைக்காதவர்களுமே அதிக லாபம் சம்பாதிப்பவர்களாக இருப்பது தவிர்க்க முடியாத பேசியபடியே சுதர்சனனும் மதிவாணனும் கடம் கரையை நோக்கி நடந்தார்கள். கடற்கரையிலிருந்து நகரை நோக்கிக் குளிர்ந்த காற்றுப் பிரவாகித்துக் கொண் ஆடிருந்தது. நகரும் கடற்கர்ையும் சங்கமமாகிற அந்த முகத்