பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 323

‘ஓ பிக்குக்களே! துக்கத்தைப்பற்றிய உயரிய வாய்மை இது:

‘பிறப்பிலே வேதனை இருக்கின்றது; “தளர்ச்சி வேதனை, பிணி வேதனை, மரண வேதனை, இன்பகரமா யில்லாதவைகளின் சேர்க்கை வேதனை; நிறைவேறாத ஆசையும் வேதனையானது. சுருங்கக் கூறினால், பற்றுக் காரணமாக எழும் ஐந்து உபதான ஸ்கந்தங்களுமே[1] வேதனையாயுள்ளவை.

‘ஓ பிக்குக்களே! துக்கத்தைப் பற்றிய உரிய வாய்மை இது.

ஓ! பிக்குக்களே! துக்க உற்பத்தி பற்றிய வாய்மை இது:

‘உண்மையில் இதுதான் வேட்கை-புதுப் பிறவிக்குக் காரணமானதும், புலன்கள் இன்பத்தோடு அங்கும் இங்குமாக அலைந்து இன்பத் தேட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தூண்டும் வேட்கை , அதாவது, (காமம் முதலிய) உணர்ச்சிகளைத், திருப்தி செய்யவோ, (எதிர்கால) வாழ்வில் ஆசைகொள்ளவோ, அல்லது (இந்த) வாழ்வில்) வெற்றியடையவோ, கொள்ளும் பேராவல்.


  1. அறிவுள்ள பிராணிகள் யாவும் ஐந்து ஸ்கந்தங்களின் சேர்க்கையால் உண்டானவை. அவை உருபு (ரூபம்), நுகர்ச்சி (வேதனை), குறி (ஸம்ஜ்ஞை ), பாவனை (ஸம்ஸ்காரம்), உள்ள அறிவு (விஞ்ஞானம்), இங்கு ஸ்கந்தங்கள் என்றது ஐந்து ஸ்கந்தங்களின் சேர்க்கையால் ஏற்படும் நிலைமைகளையும் அவைகளின் காரணங்களையும்.