பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 183

றியது; (அதன் இயல்புபற்றிய) அறிவு எழுந்தது; (அதன் காரணம்பற்றிய) தெளிவு ஏற்பட்டது; (சாந்தியடையும் மார்க்கத்திற்கு வழி காட்டும்) பேரறிவு உண்டாயிற்று; (அதைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றும்) ஒளியும் உதயமாயிற்று.

‘ஓ பிக்குக்களே! துக்கம்பற்றிய உயரிய வாய்மை இது என்பதை–இது பரம்பரையாக (நமக்கு) வந்துள்ள தந்துவங்களில் (ஒன்றாக) அமைந்திருக்கவில்லை எனினும்–நான் தெளிவாக உணர்ந்துகொள்வதற்காக, (அதைக் கண்டு கொள்ளக்கூடிய–ஞானமாகிய) கண் என்னுள்ளே தோன்றியது, (அதன் இயல்பு பற்றிய) அறிவு எழுந்தது, (அதன் காரணம் பற்றிய) தெளிவு ஏற்பட்டது (சாந்தியடையும் மார்க்கத்திற்கு வழி காட்டும்) பேரறிவு உண்டாயிற்று, (அதைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றும்) ஒளியும் உதயமாயிற்று.

‘ஓ பிக்குக்களே! துக்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை-இது பரம்பரையாக (நமக்கு) வந்துள்ள தத்துவங்களில் (ஒன்றாக) அமைந்திருக்கவில்லை எனினும் - நான் தெளிவாக உணர்ந்துகொண்டேன்; (அதைக்கண்டுகொள்ளக் கூடிய ஞானமாகிய ) கண் என்னுள்ளே தோன் றியது; (அதன் இயல்புபற்றிய) அறிவு எழுந்தது; (அதன் காரணம் பற்றிய) தெளிவு ஏற்பட்டது; (சாந்தி யடையும் மார்க்கத்திற்கு வழிகாட்டும்) பேரறிவு உண்டாயிற்று; (அதைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றும்) ஒளியும் உதயமாயிற்று.

‘ துக்க உற்பத்தியைப் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை-இது பரம்பரையாக