பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 197

களும் தரும இராஜ்யத்தின் குடிகளாக இருக்கும் படி செய்யுங்கள்.

‘இதுவே புனிதமான சங்கம்; இதுவே புத்தரின் சங்கம்; புத்தரைச் சரணடைந்துள்ளவர் அனைவருக்கும் ஒருமைப்பாட்டை அமைக்கும் சங்கம் இதுவே!’

அஜ்ஞாத கௌண்டின்யர் முதலிய ஐந்து சீடர்களும் பௌத்த மும்மணிகளாகிய சரணங்களைக் கூறிக் கொண்டு சங்கத்தில் சேர்ந்தனர்:

நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ
ஸம்மா ஸம்புத்தஸ்ஸ

‘புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி!

‘துதியம்பி புத்தம் சரணம் கச்சாமி,
துதியம்பி தம்மம் சரணம் கச்சாமி,
துதியம்பி சங்கம் சரணம் கச்சாமி!

‘ததியம்பி புத்தம் சரணம் கச்சாமி,
ததியம்பி தம்மம் சரணம் கச்சாமி,
ததியம்பி சங்கம் சரணம் கச்சாமி!’

மான்சோலையில் தங்கியிருக்கையில் புத்தர் காசி நகரத்தைச் சேர்ந்த சில வேதியர்களுக்கும் குருக்களுக்கும் உபதேசம் செய்து தமது சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். காசிகை என்னும் தாசி ஒருத்தி அவரைச் சரணடைந்து தன் குமாரர்களைச் சங்கத்தில் சேர்த்துவிட்டு முக்தியடைந்தாள். அஜயன், அவன் குமரன் நாலகன்,