பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உள்ளம் வள்ளுவனாரின் அறம் (எஸ்.எஸ். பாரதியார்) கங்கையைக் கண்டேன், வீரர் விருந்து, தமிழரசு பெறுவோம் (ரா.பி. சேதுப்பிள்ளை) கிய நான்கு சொற்பொழிவுகள் ஒரே புத்தகத்தில் விலை அணுா 3. பொய்யினாலும், சூதாட்டத்தினாலும் அரசெய்திய ஒருவளைத் தருமன்” என்றது ஆரிய தர்மம். பஞ்சமா பாதகங்கள் எனப் படும் ஐம்பெரும் பாவங்களிலே மூன்றினை இயற்றினான் அவன். சூதாட்டத்தால் நாட்டை இழந்தான். தன் தம்பி விசயனுக் கெனப் பாஞ்சாலன் தவங்கிடந்து வரத்தால் பெற்றவளை, பொது மகளாகக் கருதி, தானும் அவள் கலத்தை நுகர எண்ணி, அவள் தந்தை மறுத்தும் துணிந்து மணந்தான், குருக்ஷேத்திரப்போரில் "அசுவத்தாமா இறந்தான்." எனப் பொய் கூறித் துரோணாசாம் யாரை உயிர் துறக்கச் செய்தான். மற்றையோருக்குப் பழிதரும். இப் பிழைகள் அவன் நிலையிலே தருமங்களாகவே கருதப்பட்டன. ஆனால் தமிழ் அற நூல்கள் மேற்கறிய பிழைகளைச் செய்தவன் முக்கண்ணனே யானாலும் அவனை அறவோனாக எண்ணிற்றில் சோமசுந்தர பாரதியார். . .

வடநாடு உயர்ந்தது என்றால் ஒத்துக்கொள்ளமாட்டேன் விரிவானது, ஜனப்பெருக்கமுடையது என்றால் ஒத்துக்கொள் வேன் தென்னாட்டிலே சிறியவரும் பெரியவரும் ஆசாரமுடைய வர்களாகக் காண்கிறோம். காசி மக்களின் மாசுற்ற உடலையும் உடையையும் கங்கையாறுதான் கழுவவேண்டும்.-- சேதுப்பிள்ளை. . வடநாட்டார் தமிழ்நாட்டாரை விரும்புவதில்லை. மெய்யால் இயால்- அறிவால் உழைப்பவன் தமிழன். தமிழுக்கு வடக்கே இடமில்லையென்றால் எங்கள் தமிழ்நாட்டில் உங்கள் மொழிக்கு இடமில்லை. -ரா. பி. சேதுப்பிள் ளை இன்னும் பல அரிய கருத்துக்கள் நிறைந்தது. மறுமலர்ச்சி.நூல் 18,ஆயலூர் முத்தையா முதலி தெரு, சென்னை-1 கை நூல் நிலையம்