பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

விதையோ இருக்கிறது இதோ. இதைத் தூவுவேன் பூந்தோட்டம் காண்பேன் அந்த உருவில் அவரைக் காண்பேன் ; அந்த மணத்திலே அவர் பெருமை தெரியக் கண்டு மகிழ்வேன் - அவர் செய்துவந்த பணியை நான் மேற்கொள்வேன் என்று கூறவேண்டும். மறைந்த உத்தமர் மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும் பாம்பை, ஒழித்தாக வேண்டும். அவர் அனைவரும் ஒன்று எனும் அன்பு மார்க்கக் கருத்தைத் தூவி வந்தார். அதை நாம் செய்து முடிப்போம் என்பதே நமது உறுதியாக இருக்க வேண்டும்.

புத்தர் காலத்திலே நடந்தேறியது போலப் புதிய வழியைக் கொள்வோம் என்ற உறுதி கொண்டு உழைப்பதே, நாம் அந்த உத்தமருக்கு எழுப்பக்கூடிய நிலையான ஞாபகச் சின்னம்.