பக்கம்:மகான் குரு நானக்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மகான் குருநானக்


படைத்தார் என்பது குறித்தும் உனக்கு விளங்கக் கூடிய வயதல்ல; நீ குழந்தையப்பா' என்றார்.

அதற்கு பதில் கூறிய நானக், ஐயா கடவுளால் படைக்கப்பட்ட அந்த ஒலியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் ஆரம்பமே இல்லை என்றார்.

நானக் வயது என்ன? ஒன்பதுதானே இந்த வயதில் இப்படி ஒரு தத்துவம் பேசுகிறானே சிறுவன். அறிவு அவனிடம் வயதுக்கு மீறி அல்லவா காணப்படுகிறதென்பதை எண்ணிய ஆசிரியர் நானக்கைக் கண்டு வியப்படைந்தார்.

நானக்கின் தந்தையை அழைத்தார் ஆசிரியர். அவரிடம் உனது பையன் ஆன்மீகத் தத்துவம் பேசுகிறானப்யா இந்த வயதுக் குழந்தை எதுவும் இவ்வாறு பேசிடும் அறிவு பெற முடியாது மேதாகலூராய்! எனவே, இந்த சிறுவன் கடவுளின் கொடையாக உனக்கு வந்து பிறந்து விட்டானோ என்று மிக ஆச்சர்யத்தோடு கூறினார்.

தந்தை மேதாகலுராய், தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு சென்று, ஆசிரியர் கூறிய விவரங்களை அவனைப் பெற்ற தாயிடம் கூறினார். பெற்றோர்கள் தமது மகனுடைய எதிர்கால நிலை என்னவோ என்று வருத்தமடைந்தார்கள்.

ஆனாலும், நானக்கின் தந்தை தனது மகனுக்கு படிப்பு வராதோ இல்லையென்றால் ஆசிரியர் எதற்காக நானக்குக்கு கல்வி போதிக்கும் தகுதி தனக்கு இல்லை என்றார் என்பதை எண்ணி யெண்ணி வருத்தப்பட்டு, அவனுக்குக் கல்வி கற்பிக்க என்ன செய்யலாம் என்று கலங்கிய மனதுடன் இருந்தார்.

நானக்குக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் தகுதி தனக்கு இல்லை என்று ஆசிரியர் கூறிய பிறகு எப்படி தந்தை தனது மகனைப் பள்ளிக்கு அனுப்புவார்? அதனால் முதல் நாளன்று நானக் பள்ளிக் கூடத்துக்குப் போனதோடு, அவருடைய கல்வி வாழ்க்கை முடிந்து விட்டது.