பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

361

நாழிகைக்குள் முடிவு காட்டுவான். நம் படைக்கு எதிராக அதோ பாண்டவர் படையில் முன்னணியில் நிற்கிறானே அருச்சுனன், அவன் மனம் வைத்தால் ஒரே ஒரு கணத்தில் எல்லாவற்றுக்கும் முடிவு காட்டி விடுவான்” என்று வீட்டுமன் துரியோதனனுக்கு மறுமொழி கூறினான். துரியோதனன் அது கேட்டு மலைத்துப் போய்ச் சிலையாகி நின்றான்.

(உத்தியோக பருவம் முற்றும்)