பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 61 பாடலிபுத்திரமாக இருந்திருக்கலாமோ எனில், இல்லை; பாகூருக்குப் பாதிரிமரத் தொடர்பு இல்லை; மற்றும், ஏழாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரம் மகேந்திரவர்மப் பல்லவனால் கலைக்கப்பட்டு விட்டது; பாகூரோ ஒன்பதாம் நூற்றாண்டிலும் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. பாகூர் வடமொழிப் பல்கலைக் கழகத்திற்கு ஒன்பதாம் நூற் றாண்டில் நிருபதுங்கவர்மப் பல்லவன் மூன்று சிற்றுரர்களை அளித்த செய்தி அறியப்பட்டுள்ளது. எனவே, ஏழாம் நூற்றாண்டிலேயே வீழ்ச்சியடைந்து விட்ட பாடலிபுத்திரம் பாகூர் அன்று. திருப்பாதிரிப்புலியூரினும் வேறாகச் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ள பாடலிபுத்திர நகரம், திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 2 கி. மீ. தொலைவில் தனியாக இருந்தது என்று உய்த்துணர வாய்ப்பிருக்கிறது. திருப்பாதிரிப்புலியூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் பாதிரிக் குப்பம்’ என்னும் சிற்றுார் ஒன்று இப்போதும் உள்ளது. இவ்வூர், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையில் திருப்பாதிரிப்புலியூருக்கும் திருவயிந்திரபுரத் திற்கும் நடுவில் உள்ளது. இந்தப் பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில்தான் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும். இதற்குச் சான்றுகள் இல்லாமற் போகவில்லை; அவையாவன : - 1) பாதிரிக்குப்பத்திற்கும் திருவதிகைக்கும் . ஏறக் குறைய 20 கி.மீ. தொலைவுதான் இருக்கும். சூலை நோய் கொண்டிருந்த நாவுக்கரசர் இந்தப் பகுதியில் நள்ளிரவில் புறப்பட்டுப் பையப் பைய நடந்திருப்பினும் விடிவதற்குள் திருவதிகை சென்றடைந்து விட்டிருக்க முடியும். இந்த இரண்டு ஊர்களும் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் இருப்பது குறிப்பிடத் தக்கது.