பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பாரதி தாசனாரைப் பற்றி (பாவேந்தர் பாரதிதாசனாரின் வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும், அவரது பாடல் சிறப்பு ஒன்றும் இந்தக் கட்டுரை யில் விவரிக்கப் பெறும்). நாட்டுப் பற்று: பாவேந்தர் பாரதிதாசனார் கூறிய மிகவும் சுவையான. அவரது வாழ்க்கைச் செய்தி ஒன்று உள்ளது. அவரே இதை என்னிடம் நேரில் கூறியுள்ளார். இச் செய்தியை யான் கூட்டங்களில் கூடக் கூறியிருக்கிறேன். அதாவது: பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியை ஆண்டு கொண்டிருந்த போது, பிரிட்டிஷ் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மிடுக்காக நடந்து கொண்டிருந்தது. அத் த ைக ய போராட்டம் புதுச்சேரியில் நடக்காதவாறு பிரெஞ்சுக்கார ஆட்சியினர் கண்காணித்து வந்தனர். குறிப்பாக, அரசு ஊழியர்கள் கதர் உடையும், காந்தி குல்லாவும் அணியக் கூடாது என்பது கடுமையான ஆணையாகும். ஆனால், பிரெஞ்சு அரசுக் கல்வித் துறையில் பணி யாற்றிக் கொண்டிருந்த கவிஞர் பாரதிதாசனார் கதர் ஆடையும் காந்தி குல்லாவும் அணிவாராம். பிரெஞ்சுக்காரக் கல்வித் துறைத் தலைவர் விடுமுறை யான ஒரு நாளில் தமது வீட்டில் ஆசிரியர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தாராம். குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கூட்டத்திற்கு வர வேண்டுமாம்.