பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மக்கள்குழு ஒப்பந்தம் அவ்வாறே ஆசிரியர்கள் குறித்த நாளில் துறைத் தலைவரின் வீட்டில் சென்று அமர்ந்திருந்தனராம். அப்போது, கவிஞர் கதர் ஆடையும் காந்தி குல்லாவும் அணிந்துகொண்டு போய் ஆசிரியர்களுடன் அமர்ந்தாராம். ஆசிரியர்கள், சுப்புரத்தினம் என்னும் இயற்பெயருடைய கவிஞரை நோக்கி, டேய் சுப்புரத்தினம்! இந்த உடையுடன் இங்கே இருக்காதே - போய் வேறு உடை உடுத்திக் கொண்டு வா - அல்லது வீட்டுக்குப் போய்விடு - துரை (கல்வித் துறைத் தலைவர்) வந்து பார்த்தால் உன்னைத் தொலைத்து விடுவான்-உன் வேலைக்கே சீட்டுக்கிழித்து விடுவான் - எழுந்து போய்விடு போ - என்று வற்புறுத்தி னார்களாம். ஆனால் கவிஞர் சிறிதும் அசைந்துகொடுக்க வில்லை யாம். துரை வந்து பார்க்கட்டும் - எனக்குச் சீட்டுக் . கிழிக்கட்டும்- நான் எதற்கும் தயார்' - என்று கூறினாராம். மீண்டும் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டும், கவிஞர் நகராமல் ஒரே உறுதியுடன் இருந்துவிட்டாராம். பின்னர்ச் சிறிது நேரத்தில் பிரெஞ்சுக்காரத் தலைவர் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த கூடத்திற்கு வந்தாராம். வந்ததும் கவிஞர் சுப்பு ரத்தினத்தை நெடுநேரம் ஏற இறங்கக் கவனித்துப் பார்த்தாராம்; பிறகு அவ்விடத்தி னின்றும் அகன்று உள்ளே சென்றாராம். தலைவர் உள்ளே சென்றதும், ஆசிரியர்கள் மிகவும் அஞ்சி, கவிஞரை நோக்கி, டேய் சுப்பு ரத்தினம்! பார்த்தாயா? துரை எதற்கு உள்ளே போயிருக்கிறான் தெரியுமா? உனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் எழுதிக்கொண்டு வரத்தான் போயிருக்கிறான். இனிமேலாவது எழுந்து போய்விடு. உன்னை மன்னித்தாலும் மன்னிப்பான். இல்லாவிடின், உன்னோடு எங்களுக்கும் ஏதாவது தொல்லை