பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த தத்துவக் கவிமணி செந்தமிழ் வேள்விச் சதுரர்

மு.பெ. சத்தியவேல் முருகன், BB,

அணிந்துரை

வள்ளுவர் வீடு, வள்ளுவர் யாருடனோ உரையாடி கொண்டிருக்கிறார்.

'அப்பா பார்ப்பதற்கு? - 'கண்' 'கேட்பதற்கு? --- 'செவி: 'நுகர்வதற்கு? אא "நாசி "சுவைப்பதற்கு? *جم 'நா’ 'உணர்வதற்கு? *א 'உடம்பு’

'இதுவரை நம் உடலிலுள்ள பொறிகள் ஐந்தினுடைய பயன்களை சரியாகச் சொன்னாய். உடம்பில் மிக இன்றியமையாத உறுப்பு தலை. தலை எதற்கு?

א מא לא אא 8 8 8 9 = 3 4 8 (3

‘என்ன விழிக்கிறாய்? சொல்கிறேன் கேள். பொறி புலன்களோடு உடலை அளித்து உதவிய இறைவனை, நன்றியுடன் எண்ணிக் கும்பிடுவதற்குத்தான்் தலை. பார்வை யில்லாதவன் குருடன்; காது கேளாதவன் செவிடன்; காலில்லாதவன் முடவன்; அதுபோல, இறைவனைக் கும்பிடாதவன் - தலை இல்லாதவன்.

'கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்் தாளை வணங்காத் தலை’

உடலில் ஒவ்வொரு பொறிக்கும், உறுப்பிற்கும், உறுப்பில் தலைக்கும் பயனை வள்ளுவர் கூறியதுபோல, கையின் பயன் கொடுப்பது. உலகில் பலர். கையின் பயன் வாங்குவது என்று, மதி மயங்கி வாழ்கின்றார்கள். உலகில் மிக