60
சுதா : இளவரசியின் படத்தைப் போன்றிருக்கும்,
இவள் உருவமே இதற்கு அத்தாட்சி.
காசு : உப்பும் கற்பூரமும் உருவத்தில் ஒன்ருகத்தான். இருக்கிறது. அதற்காக, இரண்டும் ஒரே பொரு ளாகிவிடுமா? மஹாராஜா...இது ஏதோ இந்திர ஜாலமாக இருக்கிறது. எதற்கும் கொலையாளிகளே விசாரிப்போம்.
மதுரா : கொலைஞர்களே! கொலே செய்யக் கொண்டு
போன மங்கையர்க்கரசியை என்ன செய்திர்கள்? கொலையாளிகள் : ராணி அம்மாவ வெட்டுனம். வெட்டுப் படல்லே. உட்டுட்டு காங்க ஒடியாக்துட்டோம் மஹாராஜா. மதுரா : முழுப் பொய்யர்கள். இதில் ஏதோ சூதிருக்
கிறது.
(என்று கூறி மங்கையர்க்கரசியை பார்த்து) மதுரா : உண்மையாக கி மங்கையர்க்கரசி தானு? மங்கை : ஆம்! இந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் தங்கள் மருமகள் மங்கையர்க்கரசி நான்தான். மதுரா : ஆ!...மங்கையர்க்கரசி... புலிகேசி : மண்ணில் விழுந்திருக்க வேண்டிய மழைத்
துளி. மங்கை : சிப்பியில் விழுந்து விட்டது. அதல்ை என்ன
முத்தாகத்தானே பிறக்கும். சுதா : அரச ஆக்கினைக்கும், இக்காட்டின் ஆபுதங்க ளின் கூர்மைக்கும் இவளுக்கு பயமிருந்தால் இப்படிப் பேசுவாளா மஹாராஜா?