பக்கம்:மச்சுவீடு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்சு வீடு 67

அநுபவம் முதிர்ந்த நிலையில் ஜீவன் முக்தர்கள் அடுத்தபடி எதிர்பார்த்து நிற்பது விதேக முக்தியை இந்த உடம்பினின்றும் விடுபட்டு நிரதிசயானந்த மாகிய முக்தி இன்பத்தை அடையும் நிலையையே. அதை நாடோடிச் சித்தன் வேண்டுகிருன். "முருகா, எண்சாண் உடம்பாகிய இதில் பிராரப்தம் கூடியதல்ை இவ்வளவு காலம் இருந்துவிட்டேன். இந்தக் குடிசை இனி வேண்டாம். முக்தியாகிய மச்சு வீடுதான் எனக்கு வேண்டும்” என்று முருகனிடம் முறையிட்டுக் கொள்கிருன். - -

- எட்டடிக் குச்சுக்குள்ளே- முருகா

எத்தனே நாள் இருப்பேன்-ஒரு மச்சுவிடு கட்டித்தாரும்-திருத்தணி மலையில் வேலவனே! . கவுதாரி கேட்டான், மயில் கேட்டான்; கம்பு நீக்கி நெல்லும் நெல்லுக்குப் பணமும் கேட்டான், முடிவில் குச்சு வீடு மாறி மச்சு வீடு வேண்டுமென்று கேட் கிருன். மேற்போக்கான பொருளிலும் விஷயம் படிப் படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. அதற்கு ஊடே குறிப்பாக உள்ள பொருளும் அப்படியே உயர்ந்து செல்கிறது. நாடோடிச் சித்தன் கேட்கும். மச்சு வீட்டைத்தான் உலகத்தில் உள்ள மதங்களெல் லாம் கேட்கின்றன. - - * . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/73&oldid=610742" இலிருந்து மீள்விக்கப்பட்டது