24
சிக்கனம்
9. இல்லற வாழ்வில் சிக்கனம் வேண்டும். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் எறிருப்பது நல்லது. சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று கருதுகிறார்கள். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. சிக்கனம் வரவேற்கத் தகுந்தது; கருமித்தனம் வெறுக்கத் தகுந்தது. எது சிக்கனம்? எது கருமித்தனம்? என்பதை மணமக்கள் உணர்ந்துகொள்வது நல்லது.
எட்டு மைல் உள்ள ஒரு ஊருக்கு வாடகைக் காரைக் கூப்பிட்டு இருபது ரூபாய் கொடுத்துப் போய் வருவது டம்பச் செலவு. தேவையில்லாதது.
அவ்வூருச்கு 50 காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏறிப் போய் வருவது சிக்கனச் செலவு: விரும்பக்கூடியது.
50 காசும் கொடுக்க விரும்பாமல், 5 காசுக்குப் பட்டாணிக் கடலையை வாங்கி மடியில் கட்டிக்கொண்டு நடந்து செல்வது கருமித்தனம்; இது வெறுக்கத்தகுந்தது.
இப்படியே சென்னைக்குச் செல்ல எண்ணி முதல் வகுப்பில் பயணம் செய்து, அங்குள்ள மிகப்பெரிய தங்கும் விடுதிகளில் தங்கி, வாடகைக் கார்களில் ஊரைச் சுற்றி வந்து ரூ. 500 செலவிட்டு வருவது டம்பச் செலவு. இது தேவையில்லாதது.
20 ரூபாய் செலவில் இரண்டாம் வகுப்பில் படுத்துறங்கிச் சென்று, 10 ரூபாய் செலவில் ஒரு அறையில் தங்கி, பேருந்துகளில் செல்லவேண்டிய இடங்களுக்குச் சென்று, ரூ. 50,60 செலவில் சென்னைக்குப்போய் வேலையை முடித்து வருவது சிக்கனம். இது வரவேற்கத் தகுந்தது.
சாலைகளில் காத்திருந்து குறைந்த செலவில் லாரிகளில் பயணம் செய்து, சென்னை சென்று, ரயில்வே