காயங்களினால் காமக் குரோதங்களை முற்றும் விலக்கிய வனாக வேண்டும். எவ்வளவோ இடைவிடா முயற்சிகள் செய்தும் நான் இன்னும் அத்தகைய மூவகைத் துாய்மையும் பெற்றவனில்லை யென்பதை அறிந்துள்ளேன். ஆகையி ணாற்றான் இவ்வுலகத்தவரின் புகழ் எனக்கு மகிழ்ச்சி தருவதில்லை. உண்மையில், அஃது எனக்கு அடிக்கடி துயரமே உண்டாக்குகின்றது. "ஆயுத பலத்தினால் வெளி யுலகை வெற்றி கொள்வதைவிட நுட்பமான காமக் குரோத உணர்ச்சிகளை வெல்லுதல் கஷ்டமானதாக எனக்குக் காணப் படுகிறது' என்று கூறிய அநுபவ மொழிகளை அன்பர் களுக்கு நினைவூட்டுகின்றேன். இன்னும் இவ்வுண்மையை. "மோத்தையைக் கண்டகாக்கை போலவல் வினைகள் மொய்த்துன் வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்குகின்றேன். ” என அப்பரடிகளும். 'கண்மூடி யொருகண மிருக்கவென் றால்பாழ்த்த கண் கன்மங்கள் போராடுதே' எனத் தாயுமான அடிகளும் கூறுமாற்றானுமறிக. இத்தொண்டர்கள் வெளிக்கு வேலையற்றவர் போற். காணப்பட்டு அகத்தின்கண் இத்துணைப் பேரலுவலை மேற் கொண்டிருப்பதனாற்றான் திருஞான சம்பந்தப் பெருமான், "தொழிலான் மிகுதொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல' எனவும், தொழிலான் மிகுதொண்டரவர் தொழுதாடிய முன்றில்” எனவுங் கூறினாரென்க. இவ்வலுவல்கள் யாவை என்பதை 133
பக்கம்:மணிவாசகர்.pdf/133
Appearance