உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவாசகர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகஞ் சாரா தகலரா வணையான் பூவா னாதியர் கானுட் கொள்ளச் சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகமே சார்ந் தகலரா தரியா வாதவூரர் தாள் சார்ந்து வாழ்வாம். 7. பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருங் துறைகடலுண் டாசிலெழி றடித்தயா வஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து தேசமலி தரப்பொதுவார் சிவயோக மிகவிளைவான். வாசகமா மாணிக்க மழைபொழிமா முகில்போற்றி. 8. அத்தனார் பெருந்துறைபுக் கரியவினைக் கடல்கடந்து புத்தனார் மதங்கடிந்து புனிதமா கியசீவன் முத்தனார் மாணிக்க வாசகனார் முத்திக்கு வித்தனார் வாதவூர் வித்தகனார் தாள் போற்றி. 9. பெருந்துறையிற் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணைப் பெற்றி நோக்கி கரைந்துகரைந் திருகண்ணிர் மழைவாரத் ‘. துரியநிலை கடந்து போக்து திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல் - வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாங் திருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூ ரடிகளடி யிணைகள் போற்றி. 10. தேனுறும் வாசகங்கள் அறுநூறும் திருக்கோவை நானூறும் அமுதுற மொழிந்தருளும் நாயகனை வானுறும் கங்கைநிகர் மாணிக்க வாசகனை யானுறு படாதவகை இருபோதும் இறைஞ்சுவனே. 144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/144&oldid=852491" இலிருந்து மீள்விக்கப்பட்டது