பக்கம்:மணிவாசகர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடம்பை ஒன்றுமே இல்லாமல் ஆக்குவதென்பது என்ன என்று நினைக்கலாம். உடம்பும் ஏனைய பொருள்கள் போல அணுக்களின் கூட்டுறவால் ஆகியதுதானே! எனவே அந்த அணுக்களின் சேர்க்கையைக் கலைத்துவிடுகிறார்கள். அணுக்களை உடைப்பதற்கு ஒரு பேராற்றல் வேண்டும் என்பதை இன்று அறிவோம். புறக் கருவிகளின் துணை யால் அணுவைச் சிதைப்பது போலவே தம் பேராற்றலால் உடம்பிலுள்ள அணுக்களைச் சிதைத்துக் கொள்கின்றனர். இதனையே விஞ்ஞானம் அணுச்சிதைவு (Atomic Disinteg. ration) என்று பேசும். அணுச்சிதைவு ஏற்படும் பொழுது சூரியனையும் தோற்கச் செய்யும் பேரொளி உண்டாகும் என்பதை அனுபவத்தில் கண்டோம். இவர்களும் தம் உடம். பாகிய அணுக்களைத் தம் ஆற்றலால் சிதைக்கும் பொழுது பேரொளி உண்டாகிறது. உண்மையில் உடலின் அணுச் சிதைவும் ஒளியும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன. ஆனால் காண்பவர் இந் நுணுக்கத்தை அறியாராகலின் முதலில் ஒளி தோன்றியதாக நினைத்து அந்த ஒளியில் இவர்கள் மறைந்தனர் என்று கூறுவர். உண்மையில் நடை பெறுவது உடல் சிதைவு ஏற்பட்டு அதன் பயனாக ஒளி உண்டாகிறது. இதுவே சோதியிற் கலத்தல் என்று கூறப் பெறுகிறது. வள்ளலார் முதல் இம் முறையைப் பின் பற்றினவர்களே யாவர். - வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்' என்று தாயுமானவப் பெருந்தகை கூறுவதை நாம் அறிவோம். மனத்தின் ஆற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலம் இவையெல்லாம் செய்யக் கூடிய அருஞ்செயல்களே யாகும். நீர் மேல் நடத்தல் முதலிய சிறு செயல்களில் தம் ற்றலைச் செலவழிக்காமல் இப் பெரியோர்கள் தம் ஆற்றலைச் சேர்த்து வைக்கின்றனர். - :* வங்கியிற் போட்ட பணத்தை அடிக்கடி எடுத்துச் செலவு செய்யாதவன் ஒரேயடியாக ஒரே காசோலையில் அத்துணைப் பணத்தையும் வாங்கிவிடுவது போலத் தாம் 278

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/282&oldid=852762" இலிருந்து மீள்விக்கப்பட்டது