பக்கம்:மதன கல்யாணி-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 71

செய்தது. அவளோடு தான் சம்பாஷணை செய்து கொஞ்சிக் குலாவி சரசசல்லாபம் புரிந்திருப்பதாகவும் பாவனை செய்து மேன் மேலும் மனக்கோட்டை கட்டிக்கொண்டே தூக்கம் பிடியாமல் நெடுநேரம் வரையில் படுக்கையில் புரண்டு புரண்டு கிடந்து எப்போது மணி இரண்டாகுமோ என்று பெரிதும் தவித்துக் கிடந்தான். எட்டு மணிக்கே அவன் மெத்தையில் படுத்து விட்டான் ஆதலால், அவனது கண்ணிமைகள் பத்து மணிக்குள் சோர்ந்து போய் மூடிக்கொண்டன. பத்தரை மணிக்குள் அவன் துயிலில் ஆழ்ந்து விட்டான். பதினோரு மணி சமயத்தில் எழுந்த கருப்பாயி மெள்ள உள்ளே நுழைந்து பார்க்க, அவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கக் கண்டாள். அவள் ஓசை செய்யாமல் அவ்விடத்தை விட்டு, மறுபடியும் வெளியில் வந்து திண்ணையில் படுத்துக் கொண்டாள். மேலும் பொழுது வளர்ந்து நடுநிசி வேளை ஆயிற்று; கட்டையன் குறவன் வரவில்லையே என்று நினைத்த வளாய் கருப்பாயி தனது தலையை நிமிர்த்தி நிமிர்த்தி ஒற்றையடிப் பாதையைப் பார்த்த வண்ணம் படுத்திருந்தாள். பாதையின் வழியாகவே நடந்தறியாத கட்டையன் குறவன், வயல்களின் வழியாக நடந்து கருமுனரி போல அவளது காலடியில் வந்து நின்று, தனது கையில் இருந்த கட்டைத் தடியினால் அவளது காலில் மெதுவாகத் தட்டினான். இருளில் திடுக்கிட்ட கருப்பாயி சடக் கென்று எழுந்து உட்கார்ந்து, கட்டையன் வந்து நின்றதைக் கண்டாள்; உடனே திண்ணையை விட்டுக் கீழே இறங்கி, கையைப் பிடித்து அவனை அழைத்துக் கொண்டு சிறிது அப்பால் போக, குடங்குடமாகக் கள்ளைக் குடித்து ஆடிக்கொண்டு வந்திருந்த கட்டையன், “ஆளு வந்திருக்கறானா? நீ சொன்னபடி கையிலே பலமாக ஏதேச்சும் சொத்துகித்து வச்சிருக்கறானா?” என்று கேட்டான்.

கருப்பாயி, “வந்து படுத்து நல்லாத் துங்கறான். கொறஞ்சது பத்தாயிரத்துக்கு மோசமில்லை” என்றாள்.

கட்டையன்:- சரி, அந்த மம்புட்டியே இப்பிடி எடுத்தா. மொதல்லே குளியை வெட்டித் தயாரா வச்சுடுவோம். பாளெசீவற கத்தி கொண்டாந்திருக்கறேன். ஒரே வீச்சுலே களுத்தே அறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/89&oldid=650016" இலிருந்து மீள்விக்கப்பட்டது