பக்கம்:மதன கல்யாணி-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 77

ஏற்றத்தில் மைனருக்கு அவ்வளவாகப் பழக்கமில்லை ஆதலால், அவன் பெரிதும் அச்சங்கொண்டு இன்ஸ்பெக்டரது இடுப்பை இறுகப் பிடித்துக் கொண்டு முதுகோடு முதுகாய் ஒட்டிக் கொண்டான். அவர்கள் ஐந்து நிமிஷத்தில் சைதாப்பேட்டைத் தாலுக்காக் கச்சேரியண்டை வந்து சேர்ந்தனர். சேர்ந்தவுடன் நேராகப் போகாமல், அங்கிருந்து அடையாற்றுக்குப் போகும் பாட்டையில் இன்ஸ்பெக்டர் குதிரையைத் திருப்பி ஒர் அடி கொடுக்கவே அது ஒரே விசையாகப் பிடுங்கிக் கொண்டு ஒடியது: கால் நாழிகையில் மூன்று மயில் தூரம் சென்றது. எதிரில் அடை யாற்றுப் பாலம் தென்பட்டது. அங்கே வந்தவுடன் குதிரையின் கடிவாள வார் கைதவறிக் கீழே வீழ்ந்தமையால் இன்ஸ்பெக்டர் சடக்கென்று முன்புறத்தில் குனிந்து கடிவாள வாரை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தார். குதிரை போய்க்கொண்டே இருந்தது. இன்ஸ்பெக்டர் குனிந்து நிமிர்ந்த போது அவரது இடுப்பைச்சுற்றிக் கொண்டிருந்த மைனரது கை மேலே நகர்ந்து இன்ஸ்பெக்டரது மார்புவரையில் சென்றது, சென்றவுடனே மைனர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். முன்னால் உட்கார்ந்திருந்தது ஒரு பெண், என்பது அவரது மார்பின் புடைப்பினால் மைனருக்குச் சந்தேகமறத் தெரிந்தது. அவன் பெரிதும் வியப்பும் அச்சமுங் கொண்டு தவிக்க லானான். அவனது உடம்பு வியர்த்து கிடுகிடென்று ஆடியது. உரோமம் சிலிர்த்து நிமிர்ந்து நின்றது. இன்பமும் துன்பமும் ஒன்று கூடி ஒரே காலத்தில் அவனை வதைக்க ஆரம்பித்தன.


6-ம் அதிகாரம் சென்ற இடமெல்லாம் சிறப்பு

இரவில், நிருமானுஷ்யமான பாதையில், போலீஸ் இன்ஸ் பெக்டர் போல உடைதரித்து, பிரம்மாண்டமான குதிரை மீது அமர்ந்து ஒரு பெண் தனியாக சவாரி செய்து வந்தாள் என்பது மாரமங்கலம் மைனருக்குக் கனவாகத் தோன்றியதே அன்றி, உண்மையான நிகழ்ச்சி என்பதை அவரது மனம் நம்பவில்லை; அப்படிப்பட்ட மகாதுணிகரமான அந்த ஸ்திரீ யாராய் இருக்கக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/95&oldid=650029" இலிருந்து மீள்விக்கப்பட்டது