பக்கம்:மதன கல்யாணி-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217

கொள்ளுகிறீர்கள் மைனரை இது வரையில் பலவகைகளிலும் கெடுத்து வந்த நீ இப்போது அவனைக் கொண்டு போய் பாலாம்பாளுடைய வலையில் மீளாத படி மாட்டிவைத்து விட்டதுமன்றி, நாங்கள் அவனை அந்த ராக்ஷசி யிடத்திலிருந்து தப்பவைக்க வேண்டும் என்று ஏதோ ஏற்பாடு செய்து கொண்டிருந்தால், அதற்கும் இடையூறாக, நீ இப்படி எல்லாம் தில்லுமுல்லும் திரிசமனும் செய்து கொண்டா அலைகி றாய்! நாங்கள் பத்திரத்தை எடுத்துக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து, நீங்கள் இருவரும் யோசனை செய்து, அவனை விட்டு இப்படியெல்லாம் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கி வைத்துக் கொண்டு, இங்கே வந்து என்னை மிரட்டினால், நான் பயந்து பேசாமலிருந்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டாயா? ஏது! உன்னுடைய கைவரிசைகளை எல்லாம் நேருக்கு நேராக என்னிடத்திலேயே காட்டத் துணிந்து விட்டாயே! ஓகோ அந்தப் பாச்சாவெல்லம் கல்யாணியம்மாளிடத்தில் பலியாது. யாரோ துரையம்மாள் கடிதம் எழுதினாள் என்கிறாய்! ஏதோ! வெள்ளைக்காரியின் உடைகள் என்னுடைய உடுப்புப் பெட்டியில் இருந்தன என்கிறாய்! விஷயங்களோ எனக்கு இன்னமும் தெளிவாக விளங்கவில்லை. அதை விளக்கிக் கொள்ளவும் எனக்கு நேரமில்லை. என்னுடைய பெட்டியிலிருந்து என்னென்ன சாமான்களை எடுத்துக் கொண்டு போயிருக்கிறான் என்பதும் தெரியவில்லை. அவன் என் குடியைக் கெடுக்க வந்த பெருத்த நமனாக இருக்கிறான். நீ அவனை உயிரோடு கொல்ல வந்த எமனாக இருக்கிறாய்! உங்கள் இருவருக்கும் இவ்வளவு துணிச்சலா நான் உபயோகப்படுத்தும் உடுப்புகளுக்குள், யாரோ ஒரு வெள்ளைக்காரிச்சி உடைகளைக் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்களே! உங்களுடைய புத்தி இப்படியும் கெடுமா! அந்த வெள்ளைக்காரியின் உடைகளை எல்லாம் இன்னமும் என்னுடைய பெட்டியிலே தான் வைத்திருக்கிறீர்களா? அல்லது எடுத்துக் கொண்டு போய்விட்டீர் களா? என்னுடைய உடுப்புப் பெட்டிகளில் எல்லாம் நெருப்பை வைத்துக் கொளுத்தினாலும், இந்த அசுசி திராது போலிருக்கிறதே! என்று சரமாரியாக வார்த்தைகளை வாரி இறைக்கவே, அதைக் கேட்ட துரைராஜா, கால் நாழிகை நேரம் வரையில் ஸ்தம்பித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/221&oldid=646035" இலிருந்து மீள்விக்கப்பட்டது