பக்கம்:மதன கல்யாணி-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மதன கல்யாணி

உயிருக்குயிராக மதித்து அவரிடம் குலுக்கு பிலுக்கெல்லாம் செய்வதும், அவர் தனக்கு வேண்டாவிட்டால், எப்படிப்பட்ட பெருத்த விபத்திலும் அவரை மாட்டிவிட்டுத் தப்பித்துக் - கொள்ளும் குணமும் அவளிடத்தில் பூர்த்தியாக நிறைந்திருக்

கின்றன என்பது இப்போதாவது தெரிகிறதா? இது தான் தேவடி யாளுடைய குணம்; வெளிப்பகட்டும், மோசக் கருத்துமே அவர்களுடைய ஜீவாதாரமான வர்த்தகச் சரக்கு குடும்ப ஸ்திரிகள், தங்களுடைய புருஷரிடத்தில் கரைகடந்த வாத்சல்யத்தை வைத்து, அதை தங்களுடைய மனசுக்குள் அடக்கி வெளியில் காட்டாமல் மறைத்துக் கொண்டிருப்பார்கள் அவர்கள் இப்படிப்பட்ட ஜெக ஜாலமும் செய்யமாட்டார்கள் இப்படிப்பட்ட படுமோசத்திலும் இறங்கமாட்டார்கள். அவர்களுடைய பிரியம் எப்போதும் மாறாமல் இருந்து, நிமிஷத்துக்கு நிமிஷம் பெருகி மலையாக வளர்ந்து கொண்டே போகும்; உங்களைப் போல இருக்கும் அறியாத சிறு பிள்ளைகளுக் கெல்லாம், உலக அனுபோகம் இல்லை ஆகையால், உண்மை எது, வேஷம் எது என்பது தெரிகிறதில்லை. அவள் இப்போது உன்னிடத்தில் யதார்த்தமான பிரியம் வைத்திருப்பது உண்மையாக இருக்கலாம். எவளோ வழியில் போகிற ஒரு தேவடியாளுடைய பிரியம் இருப்பதால், நீடித்த சுகமும் இன்பமும் இன்பமும் ஏற்படப் போகிறதில்லை. நம்முடைய கண்மணியம்மாளுக்கு உன்னிடத்தில் பிரியம் இல்லை என்று நினைக்காதே. குடும்ப ஸ்திரீகள், கலியாணம் ஆகிறவரையில் அதை வெளியில் காட்டமாட்டர்கள். கலியாணம் ஆகிவிட்டால், அதன் பிறகு தெரியும் அவள் உன்மேல் எவ்வளவு அபாரமான பிரேமை வைத்திருக்கிறாள் என்பது. இந்த விஷயத்தில் நீ பிரியம் ஒன்றையே முக்கியமான காரியமாக எண்ணுகிறாய் போலிருக்கிறது. நியோ பெருத்த சமஸ்தானத்துக்கு அதிபதியாகப் போகிறவன். உனக்குப் பிறகோ, நீ தாலி கட்டின பெண்சாதி வயிற்றின் பிள்ளைக்குத்தான் இந்த சமஸ்தானம் சொந்தமாகும். நாம் எப்படித்தான் பத்திரம் எழுதிக் கொடுத்திருந் தாலும் பாலாம்பாளின் வயிற்றுக் குழந்தைக்கு இந்த சமஸ்தானம் சேராது. அதை நான் வக்கீல்களிடத்தில் கேட்டு சந்தேகமறத் தெரிந்து கொண்டு விட்டேன். ஆகையால் நீ அவளுடைய சிநேகத்தை இவ்வளவோடு நிறுத்திக்கொள்ள வழி தேட் வேண்டும். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/72&oldid=646325" இலிருந்து மீள்விக்கப்பட்டது