உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் 1


அந்தக் கடவுள்தானா ?

பிறப்பும் இறப்பும் அற்ற முழுமுதற் கடவுள் எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தார்! அவரே எல்லாவற்றையும் ஆண்டு வருகிறார்! உயிரினம் அவருக்கு அடங்கி நடக்கவும் வேண்டும், நன்றியறிதல் காட்டவும் வேண்டும்! ஆண்டவன் மனிதனிடத்தில் சிலவற்றை எதிர்பார்க்கிறார்! எவன் அவருடைய விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறானோ, அவன் மத பக்தனாகிறான் ! இந்தவிதமான மதம் உலகெங்கணும் பெருவழக்காய் இருந்துவருகிறது.

இந்தக் கடவுள் பலிகளைக் கேட்டார் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குருதியைச் சொரிந்த போது, அவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார் என்றும் பல நூற்றாண்டுகளாகப் பல கோடிக்கணக்கான மக்கள் நம்பி வந்தனர். பிற்பாடு எருது, வெள்ளாடு, வாத்து இவைகளின் குருதியை மட்டும் பெற்றுக்கொண்டே ஆண்டவன் பெருமகிழ்ச்சியுற்றார் என்று கொள்ளப்பட்டது. இந்தப் பலிகள் கொடுத்ததன் காரணமாக அல்லது இவற்றிற்குப் பதிலாகக், கடவுள், மழை, ஞாயிற்றின் வெளிச்சம், அறுவடை முதலியவைகளை வழங்கியதாகவும் கொள்ளப் பட்டது. இப்படிப்பட்ட பலிகளிடாமற் போனால், கடவுள், பஞ்சம், கொள்ளை, நோய், வெள்ளம், நில அதிர்ச்சி ஆகியவைகளை அனுப்பிவிடுவார் என்றும் நம்பப்பட்டது.