உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மதமும் மூடநம்பிக்கையும்

கிறித்துவ மதக் கொள்கைப்படி பலி கொள்வதில் கடைசி நிகழ்ச்சியாக நம்பப்பட்டது ஆண்டவன் அவருடைய மகனின் குருதியைப் பெற்றுக்கொண்டதாகும். அவருடைய மகன் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஆண்டவனாகிய அவர் முழு மனமகிழ்ச்சியடைந்தார், அதற்குப் பிறகு குருதி வேட்கையை அவர் கொள்ளவில்லை என்றும் நம்பப் பட்டது.

ஆண்டவன் வேண்டுதலையைக் கேட்டார்; அதற்குப் பதிலிறுத்தார்; அவர் பாபங்களை மன்னித்தார்; உண்மையான நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களைக் காப்பாற்றினார் என்று இந்தப் பழங் காலங்களிலெல்லாம், இந்தப் பழங்கால மக்கள் எல்லோராலும் நம்பப்பட்டு வந்தது. பொதுவாகச் சொல்லப்போனால், இதுதான் மதம் பற்றிய விளக்கமாகும்.

இப்பொழுது, நம்முன் நிற்கும் கேள்விகள்: எந்தத் தெரிந்த உண்மையின் மீதாவது மதம் கட்டப்பட்டதா? கடவுள் என்று சொல்லப்படும் ஒருவர் இருக்கிறாரா? உங்களையும் என்னையும் படைத்தவர் அவர்தானா ? எந்த வேண்டுதலையாவது எப்பொழுதாவது பதிலிறுக்கப் பட்டதா? குழந்தையோ அல்லது எருதோ பலியிடப்பட்டதன் காரணமாக மனமொழி மெய்களால் காணப்பட முடியாத கடவுளால், எந்த ஒரு நன்மையாவது வந்து சேர்ந்ததா?

முதலில் - மக்களாகிய குழந்தைகளை எல்லையற்ற ஒரு பெருங் கடவுள் தான் தோற்றுவித்தாரா?

அறிவில் குறைபாடுடையவர்களை ஏன் இவர் தோற்றுவித்தார்?

உடற்குறையுடையவர்களையும், உதவியற்றவர்களையும் ஏன் இவர் தோற்றுவிக்கவேண்டும் ?