முன்னுரை வாசகர்கள் பல்லாண்டுகளாக ஆவலுடன் எதிர் பார்த்த "மதுரை மாவட்டம்" இப்போது வெளிவருகிறது. ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலம் நான் கண்டும் கேட்டும் படித்தும் திரட்டிய குறிப்புகளின் தொகுப்பே இது. தாள் இந்த நூலை ஆர்வமுடன் அச்சிட்டுத் தந்த குருகுலம் அச்சகத்தார்க்கும் விலை ஏற்றம், கிடையாமை ஆகிய சிக்கல்களைப் பொருட்படுத்தாமல் இவ்வளவு பெரிய நூலை வெளியிட முன்வந்த குருகுலத் தாருக்கும் என் நன்றி உரியது. தரமான நூல்களை,பயனுள்ள நூல்களை வெளியிட வேண்டும் என்பது திரு அப்பாக்குட்டி அவர்களுடைய விருப்பம். அவ்விருப்பம் மேன்மேலும் இனிது நிறைவேறுவதாக. நூலை உருவாக்குங்கால், தகவல் தந்தும் செய்தி களைச் சரிபார்த்தும் எழுதியுதவியும் எனக்குத் செய்த அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். துணை . சாஸ்திரி நகர் அஞ்சலகக் கட்டிடம், அடையாறு,சென்னை 600 020 தொலைபேசி 1 413701 1-12-1980 சோமலெ.
பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/7
Appearance