பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 -- o பெண்மையைத் தான் தெய்வமென்று பேசுகின்றான் பாரதிஅம் மென்மையைத் தான் ஏன்மறந்தீர்? மேவியநல் இல்லறத்தில் ஏற்றுந் திருவிளக்கே ஏந்திழையார் என்றுரைப்பர் துாற்றுந் தெருவிளக்காய்த் தோன்றுவதேன் ? திங்கள்முகம் காய்ந்துலர்ந்து காண்பதுமேன்? கட்டழகு மேனியெலாம் தேய்ந்துலர்ந்து வாடியதேன்? சிந்திப்பீர்; நாகரிகப் பேரால் கடைச்சரக்கைப் பேணுவதோ முன்னேற்றம்? தீராப் பெருநோயாய்த் தீப்பழக்கம் சூழ்ந்ததுவே! மேலாடை யில்லாமல் மேனி மறைக்காமல் நூலாடை என்றுசொலி நுண் ணிடையில் சுற்றிவிட்டு மெய்யெல்லாங் காட்டுகிற செய்கையிதோ முன்னேற்ற்ம்? தையல் இனத்துதித்தீர் தாய்க்குலத்தீர் ஆய்ந்துரைப்பீர்; நாட்டை உருவாக்கும் நல்லகுலம் நீங்களம்மா பாட்டால் குறைசொன்ன பான்மைக்குச் சீறாதீர்: கல்வியிலும் ஆட்சியிலும் காட்டுந் திறமையிலும் பல்வகையாம் நுண்கலையின் பாங்கினிலும் ஓர் நிகராய் முன்னேற்றங் கொண்டுயர்க; மொய்குழலீர் நாடுயரும் நன்னோக்கங் கொண்டுரைத்தேன் நான்.