பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அறமுரைக்கும் பெருநூல்கள் நமது நாட்டில் ஆயிரங்கள் உண்டென்பர்; ஆல்ை அந்த அறமனைத்தும் நூல்களுக்குள் அடக்க மன்றி ஆறறிவு படைத்தவர்.பால் அரும்ப வில்லை: திறமிகுந்த அரசியலைப் பாழ டித்தார் தீவினைகள் அடிதடிகள் சூது வஞ்சம் உருவெடுத்து வரச்செய்தார்; தனிப்த்தை 切 உயிர்ப்பிக்கும் நிலைக்களனாக் கொண்டு விட்டார். பட்டறிவும் நுண்மதியும் பொதுந லத்தைப் பரிவுடனே புரிகின்ற துய நெஞ்சும் எட்டுணையும் அஞ்சாத துணிவுங் கொண்டோர் £) எவர்.அவரே அரசியலில் புகுதல் வேண்டும்; பட்டம்விடுஞ் சிறுவர்களும், பள்ளி சென்று பயில்பவரும், குழப்பங்கள் விளைவிப் பாரும், கட்டவிழ்ந்த காளையரும் புகுந்து விட்டால் கலகமலால் மற்றென்ன விளையும் அங்கே? நன்றெனினுந் தீதெனினுந் தமது செய்கை நாட்டைத்தான் சாருமென நினையா ராகித் தின்றலையும் வாழ்வுக்கே அடிய ரானார் சிறிதேனும் நாட்டுணர்வும் இல்லா ரானார்; ஒன்றுணர்வால் இணைந்ததுபோல் இணைந்தி ருப்பர் உள்ளத்தே நஞ்சதனை மறைத்தி ருப்பர் கொன்றனைய செய்தற்கும் கூசா மாந்தர் குய்யங்கள் அரசியலில் விளைத்து நிற்பர். குய்யங்கள்- வஞ்சனைகள்