பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 44 நல்ல சமையமடா ! 1 لازاً ۳۱اریہ جری 2 ص (خانہ مٹ ஒன்றே குலமென்றும் ஒன்றே கடவுளென்றும் நன்றே புரிந்து நலம்பெற்றோம் முன்னாளில்: நீறுந் திருமண்ணும் நெற்றிதனில் நாமணிந்தோம் சேரும் படியாகச் செய்தணிந்தோம் தொப்பிகளை; நெஞ்சிற் சிலுவைதனை நேராகத் தொங்கவிட்டோம் மஞ்ஞைதருந் தோகை மதித்தெடுத்துக் கைப்பிடித்தோம்; நீண்ட சடைமுடித்தோம்; நேருந் தலைமழித்தோம்: வேண்டித் துவர்தரித்தோம்; வேள்விக் கடன் முடித்தோம் ஊரில்லை பேரில்லை ஒன்றும் வடிவில்லை மாறில்லை ஒர் பிறப்பும் மாய்வும் உடையதிலை என்றெல்லாங் கூறும் இறைவனுக்கு வைத்தபெயர் ஒன்றிரண்டா ஒரா பிரமன்றோ/ மேலுமுண்டு: பாரில் பிறக்கவைத்தோம்; பாவந் துயர்கொடுத்தோம்; தேரில் நிறுத்தித் திருமணங்கள் செய்துவைத்தோம்; ஆட்டாத ஆட்டமெலாம் ஆண்டவனை ஆட்டிவைத்தோம் பூட்டா மனக்கதவைப் பூட்டிவிட்டுப் பூசைசெய்தோம்: இன்று பலவாகி எங்கும் வளர்-சமையம் நன்று புரியாமல் நாட்டில் எளியவரை எய்த்துப் பிழைப்போர்க் கிடமாகிப் போனதலால் பூத்த நலம் உண்டோ புகல்? மஞ்ஞ்ை - மயில் துவர் - காவி uiの一