பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கடைத் தெருவில்.... ol

  • 轟 ń. -:巧 Lo ایستگیریه இA «روی ۲ اوت

ஏகுங்கால் நடுத்தெருவில் வரிசை யாக இரண்டுகால் காளை சில நடக்கக் கண்டோம்; வேகஞ்சேர் உந்தெனினும் விலக லின்றி விளையாட்டு மொழிபேசி நகைத்துக் கூவிப் போகுங்கால் அவ்விளைஞர் செய்யுஞ் செய்கை பொல்லாங்குப் போக்காகும் என்று நெஞ்சம் வேகுங்கால், அவள்சொன்னாள் 'மாக்க ளாக விரைகின்ற புதுமைக்கோர் அறிவிப் பென்று. மடந்தையாைத் தெருவழியில் காணும் போது மானத்தை நாணத்தை மதித்த லின்றி நடந்தருகிற் செல்லுவதும், முறைத்துப் பார்த்து நகைப்பதுவும், ஊளையென ஒஒ வென்று தொடர்ந்துகுரல் எழுப்புவதும், எள்ளல் செய்து துரத்துவதுங் கண்டுமனம் நைந்தோம்; இங்குப் படர்ந்துவரும் இச்செயல்தான் தமிழர் நாட்டுப் பண்பாட்டுக் கேட்டுக்கோர் அறிவிப் பென்றாள்'