பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வெண்தாடி வேந்தரவர், ஐயா என்றே விழைந்தழைக்கும் கிழவரவர், பெரியார் என்றே பண்பாடிப் போற்றுகின்ற தலைவர். எங்கள் பகுத்தறிவுப் பகலவனார். தமிழர் பண்பு மண்மூடிப் போகாமல் காக்க வந்த மாவீரர், பாழ்பட்ட சமுதா யத்தின் கண்மூடிப் பழக்கத்தால் எழுந்த கோட்டை கல்கலத்தே இடிந்துவிழச் செய்த தீரர். அப்பெரியார் திருப்பெயரைத் தலையில் தாங்கி, ஆளுடைய பிள்ளையிவர் அரவ ணைப்பால் ஒப்பரிய நடைமுறையில் இயங்கு கின்ற ஒளிநிறுவுங் கல்லூரி யதனிற் கல்வி தப்பிரியப் பயில்கின்ற இளைஞர் நீவிர் o சமுதாயச் சிந்தனையை மனதிற் கொண்டீர்; 5/ அப்பெரிய மகிழ்ச்சியினால் வாழ்த்து கின்றேன் o அடடாஒ சமுதாயம் வாழும் என்றே. எதை எதையோ சிந்திக்கும் இளைஞர் கூட்டம் இருக்கின்ற நிலைகண்டு வருந்தி நெஞ்சம் பதைபதைக்கும் இயல்புடையேன் ஆனால் நீவீர் பயனுள்ள சிந்தனைக்கு வந்து விட்டீர்; இதைநினைந்து மகிழ்கின்றேன்; இன்று நீங்கள் இளைஞரெனும் நிலையிலுளிர், நாளை நாட்டின் விதையனையீர், வேரனையிர், வளர்ந்த பின்னர் விடுதலையின் பயன் நுகரும் தலைவர், ஆவீர். H ஆளுடையபிள்ளை == கல்லூரி முதல்வரி ് തപശ് ? தி. = அடி ல்ேக