பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே பாவரசர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்ற ஆய்வு நூல் முனைவர் மு. இளங்கோவன் என்பவராலும், 'முடியரசன் படைப்புகள் ஒர் ஆய்வு' என்ற நூல் முனைவர் சிரீகுமார் என்பவராலும் பூங்கொடியும் மணிமேகலையும்: என்ற ஒப்பாய்வு நூல் முனைவர் மு. நிலாமணி என்பவராலும் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன.

3 கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம் என்னும் பெயரில் புலவர் தி.மு. அரசு மாணிக்கம் என்பார், ஈரோட்டில் மன்றம் அமைத்துத் தமிழ்த் தொண்டு செய்து வருகிறார். கும்பகோணத்தில், கவிஞர் இனியன் என்பாரால், கவியரசு முடியரசன் இலக்கிய மன்றம் தமிழ்ப்பணி செய்து வருகிறது.

3 கவிஞரது படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்

பட்டுள்ளன.

3 கவிஞரது வாழ்க்கை வரலாறு சாகித்திய அகாடமியால்

வெளியிடப்பட உள்ளது.

பெற்ற பாராட்டுகள்

பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக் கவிஞர், கவி மா மன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் பாட்டு முடியரசர், கவியுலக முடியரசர், சுயமரியாதைக் கவிஞர், தமிழிசைப் பாவலர்.

வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச்செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப்பிழையார். ஆர்த்தவாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப்பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனிதநேயர், பழகுதற்கினிய