பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வாழ்த்து

முழுமதியே! செந்தமிழே காலங் கண்டும் மூவாத மலர்ப்பொழிலில் ஆடி வந்த அழகொழுகும் இளமையிலே உலக மாந்தர்

அகமனைத்தும் குளிர்விக்கும் தென்றற் காற்றே பழகுசுவைக் கனிமூன்றும் சுவைத்துப் பார்த்துப்

பாடிவரும் பூங்குயிலே! எனது நெஞ்சில் அழகுதவழ் தோகைவிரித் தாட வாவா

அவ்வரங்கில் குரலெடுத்துப் பாட வாவா!

– 25.08.1979