பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனறும வாழவா

அள்ளிக் கொடுத்தவர் சாவதில்லை அன்பு மனத்தவர் மாய்வதில்லை - அள்ளிக்

உள்ளம் மிகுத்தவர் வீழ்வதில்லை ஒங்கு பெரும்புகழ் சாய்வதில்லை - அள்ளிக்

முல்லைக் கொடிக்கொரு தேர்கொடுத்தான் - பாரி முத்தமிழ் வாணர்க்கோ ஊர்கொடுத்தான் - அள்ளிக்

சொல்லுந் தமிழ்க்குயர் வாழ்வளிக்கக் குமணன் தூய தலைகொள வாள்கொடுத்தான் - அள்ளிக்

நெல்லிக் கணிக்கொரு பேரளித்தான் அதியன் நீள்புகழ் அவ்வைக்கு வாழ்வளித்தான் - அள்ளிக்

கல்விப் பணிக்கெனச் சீர்கொடுத்தான் - அழகன் கைப்பொருள் யாவையு மேகொடுத்தான் - அள்ளிக்

வள்ளல்க ளாமென வாழ்பவரை

மாய்ந்தனர் என்றிங்கு யாருரைத்தார்?

உள்ளம் இருப்பவர் யாவருமே உலக வரைப்பினில் வாழ்ந்திடுவார்.