பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய தமிழ் முனிவர்

14–9–75

தாயைத் தந்தையைத் தம்முடன் பிறந்தார் தோயும் அன்பைத் துறந்தனர் எனினும் முப்பா லூட்டிய முத்தமிழ் அன்பினில் தப்பா தொழுகுந் தவமுனி யவர்தாம்; விட்டுப் பற்றும் வேறுள பற்றும் வீட்டுந் துறவறம் விழைந்தவர் எனினும் நாட்டுப் பற்றினை நயந்திடுங் குறிக்கோள் வேட்டுப் பணிசெயும் வியத்தகு தொண்டர்; மனத்துப் பற்றினை விடுத்தனர் ஆகினும் இனத்துப் பற்றோ டியங்கும் நடத்தையர்; தம்மைத் துற்றினும் தாம்பகை கொள்ளார் எம்மவர் என்றே இனநலம் பேணுவர்; கருத்து வேற்றுமை கருதில ராகிப் பொறுத்துச் செல்லும் புன்னகை முகத்தினர்; பன்னெறி யாளரும் பழகுதற் கேற்ற நன்னெறி யாளர் நாநலம் மிக்கார்; எளியோர்க் காணின் இரங்கும் நெஞ்சினர் அளியால் பற்பல அறங்கள் புரிபவர்.

வீட்டும் - அழிக்கும்.