பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருச்சனை ஒன்றே ஆண்டவன் அருளைப் பெறத்தகு வழியெனல் பேனா ராகி, உருக்குலைந் தொடுங்கிய உழைப்பினர்வாழத் தெருத்தெரு வாகத் திரிவோர் உய்ய வாழ்வின் துய்ப்பிலா வறியவர் நலம்பெறச் சூழ்வதே ஆண்டவன் தொண்டெனத் தொடர்வார்; திருமடம் ஒன்றே உறைவிடம் என்று கருவறைப் புகுந்து காலங் கழியார் ஊர்தொறும் ஊர்தொறும் ஒயா தோடிச் சீர்பெறும் சிந்தனை செப்பிடும் பணியினர்; சமயம் சார்தரு குறைகளைச் சாடிடச் சமயம் வருங்காற் சற்றுந் தயங்கார்; நற்றமிழ் பாடிய சொற்றமிழ்ச் சுந்தரன் சொற்றிடும் பாடலிற் சொக்கிய சொக்கன் தோழமை தந்தும் துணைபல புரிந்தும் வாழும் வகைஎலாம் வழங்கினன் என்பர்; அடிகளும் என்பால் அரும்பிய பாடலின் அடிகளில் மயங்கினர் அன்புறு தோழமை தந்தென துளத்தைக் கொண்டனர் தமிழ்முனி; குன்றைச் சூழ்ந்துள குன்றக் குடியில் ஒன்றிய திருமடம் உறைதரும் அடிகள் நன்றிவண் வாழ்கென நலமிகு நெஞ்சே சென்றுரை அவர்பால் சேவடி பணிந்தே.