பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(51D

முதற்படியில் நின்றிருந்தான் அன்றி ருந்தே

முகம்மலர அகம்மலரப் பழகி வந்தான்; முதற்படியில் நின்றபடி முயற்சி தன்னால்

முன்னேற்றப் படியேறி உயர்ந்து வந்தான்; இதற்கிடையில் பலபடிகள் கடந்தும், முன்னர்

இருந்தபடி யிருக்கின்றான் நட்பில் இன்றும்; மதர்ப்படியில் உருப்படியும் செருக்கு மட்டும்

மனத்தடியில் சாகுபடி யாக வில்லை.

மனத்துக்குள் செருக்கில்லான் எனினும் சான்றோர்

மதிக்கின்ற பெருமிதத்திற் குன்றமாட்டான் முனைப்புற்ற எவரிடத்தும் பணிய மாட்டான்

முன்னேற்றம் தடைப்படினும் வளைய மாட்டான்; எனக்குற்ற இளவலென விளங்கி நிற்பான்;

எனினுமவன் அடிப்பொடியன் நட்பில் மட்டும்; புனத்துக்குள் உலவிவரும் கவரி மான்போல்

பூமனத்தன் வாழ்கின்றான் வாழ்க நன்றே.

உருவத்தாற் சிறியவன்ற்ான் எனினும் நல்ல

உள்ளத்தால் உயர்மதியால் பெரியன் ஆவன்; பருவத்தால் முதிர்ந்துவரும் புலமை கொண்டான்

பாதியிலே உதிர்ந்துவிழும் வெம்பல் இல்லை; உருவத்தில் மெலியவன்றான் எனினும் கல்வி

ஊற்றத்தால் புலமையினால் வலிமை மிக்கான்; எருவைத்தாற் பயிர்வளரும்; புலமை வைத்தான்

இவனிடத்தே தமிழ்வளரும் செழித்து நன்றே:

மதர்ப்படியில் உருப்படியும் - மதர்ப்பின் அடியில் உருவாகும்.