பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிக நோக்கறியான்

பயிலும்நாள் தொடங்கி என்பாற்

பழகிடும் நண்பன்; அன்பு

செயலிலே குறைவு காணேன்;

அன்றுபோற் செழுமை கண்டேன்,

மயலுறும் செருக்கே யில்லா

மதிமிகு புலமை கண்டேன்;

அயலென எண்ணா தென்னை

அவனுடன் பிறப்பென் றெண்ணும்.

உளத்திலே ஒன்றை வைத்தும்

உதட்டில்மற் றொன்றை வைத்தும் கிளத்துதல் அறியா வாயன்;

கெடுதலை நினையா நெஞ்சன் களைப்புறும் பொழுதில் மற்றோர்

கனிவுடன் செய்த நன்றி உளத்தினிற் பதிய வைத்தே

உணர்ந்துணர்ந் துருகும் மேலோன்.