இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வணிக நோக்கறியான்
பயிலும்நாள் தொடங்கி என்பாற்
பழகிடும் நண்பன்; அன்பு
செயலிலே குறைவு காணேன்;
அன்றுபோற் செழுமை கண்டேன்,
மயலுறும் செருக்கே யில்லா
மதிமிகு புலமை கண்டேன்;
அயலென எண்ணா தென்னை
அவனுடன் பிறப்பென் றெண்ணும்.
உளத்திலே ஒன்றை வைத்தும்
உதட்டில்மற் றொன்றை வைத்தும் கிளத்துதல் அறியா வாயன்;
கெடுதலை நினையா நெஞ்சன் களைப்புறும் பொழுதில் மற்றோர்
கனிவுடன் செய்த நன்றி உளத்தினிற் பதிய வைத்தே
உணர்ந்துணர்ந் துருகும் மேலோன்.