பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(7)

பாளைநகர்க் கொட்டிலுக்குள் போவென் றாலும் பாராளக் கோட்டைக்குள் வாவென் றாலும் பாளைநிகர் சிரிப்புடனே செல்கின் றாய்நீ

பக்குவஞ்சேர் ஞானிஎன ஆகிவிட்டாய்; காளைகளுக் குன்பெருமை தெரிய வில்லை

கலைத்துறையின் திலகமுந்தான் அறிய வில்லை; நாளைவர லாறுரைக்கும் நாய கன்நீ

நான்புகழ்ச்சி சொல்லவில்லை உண்மை சொன்னேன்.

தருக்குடனே அதிகார போதை ஏறித்

தனிக்குடையின் கீழிருந்தோர்கொண்டு வந்த நெருக்கடியில் சிரித்தவன்நீ; நின்னைக் காண

நிமிர்ந்தெழுந்த கூட்டத்தில் இடித்துத்தள்ளும் நெருக்கடியில் சிரிப்பவன் நீ; உறுதி யோடு

நிற்பவர்தம் திருமணங்கள் நடத்தி வைத்துப் பொறுப்புடனே கழகத்தைக் காக்கப் பேச்சில்

பொடிவைத்துச் சிரித்தெமையும் சிரிக்க வைத்தாய்.

திரையுலகில் பராசக்தி வந்த போதுன்

திறமையெலாம் கண்டவர்கள் புகழ்ந்து நின்றார்; அரசியலில் பராசக்தி வந்தபோதுன்

ஆற்றலெலாம் கண்டவர்கள் வியந்து நின்றார்; இருபெரிய பராசக்தி வலிமை எல்லாம்

எழுத்தாலே வென்றவன்நீ; இனிமேல் யார்க்கும் வருமுலகில் இராசக்தி உன்னை வெல்ல;

வருபகைகள் நண்புகொள ஏங்கிநிற்கும்.