(7)
பாளைநகர்க் கொட்டிலுக்குள் போவென் றாலும் பாராளக் கோட்டைக்குள் வாவென் றாலும் பாளைநிகர் சிரிப்புடனே செல்கின் றாய்நீ
பக்குவஞ்சேர் ஞானிஎன ஆகிவிட்டாய்; காளைகளுக் குன்பெருமை தெரிய வில்லை
கலைத்துறையின் திலகமுந்தான் அறிய வில்லை; நாளைவர லாறுரைக்கும் நாய கன்நீ
நான்புகழ்ச்சி சொல்லவில்லை உண்மை சொன்னேன்.
தருக்குடனே அதிகார போதை ஏறித்
தனிக்குடையின் கீழிருந்தோர்கொண்டு வந்த நெருக்கடியில் சிரித்தவன்நீ; நின்னைக் காண
நிமிர்ந்தெழுந்த கூட்டத்தில் இடித்துத்தள்ளும் நெருக்கடியில் சிரிப்பவன் நீ; உறுதி யோடு
நிற்பவர்தம் திருமணங்கள் நடத்தி வைத்துப் பொறுப்புடனே கழகத்தைக் காக்கப் பேச்சில்
பொடிவைத்துச் சிரித்தெமையும் சிரிக்க வைத்தாய்.
திரையுலகில் பராசக்தி வந்த போதுன்
திறமையெலாம் கண்டவர்கள் புகழ்ந்து நின்றார்; அரசியலில் பராசக்தி வந்தபோதுன்
ஆற்றலெலாம் கண்டவர்கள் வியந்து நின்றார்; இருபெரிய பராசக்தி வலிமை எல்லாம்
எழுத்தாலே வென்றவன்நீ; இனிமேல் யார்க்கும் வருமுலகில் இராசக்தி உன்னை வெல்ல;
வருபகைகள் நண்புகொள ஏங்கிநிற்கும்.