பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய தமிழரசு

இந்நாட்டு வரலாற்றை நோக்குங் காலை

இருந்தவரும் புகுந்தவரும் ஆண்ட நாளில் பொன்காட்டிப் பொருள்கட்டிப் புகழுங் காட்டிப்

பொருதவர்தம் புறங்காட்ட மறமுங் காட்டித் தந்நாட்டை வளமுறுத்த வழிகள் காட்டித்

தனியாட்சி நடத்திவந்தார் மன்னர் என்று பொன்னேட்டில் பொறித்துளதைக் கண்டோம் அன்று

புதியதொரு வரலாற்றைக் கண்டோம் இன்று.

அன்றிருந்த மன்னரெலாம் செங்கோல் ஏந்தி ஆண்டிருந்த அந்நாளில் மன்பதைக்கு நன்றுணர்ந்து செய்தபெரும் நன்மையெல்லாம் நாலைந்தும் ஆறேழும் என்ற எண்ணுள் நின்றிருக்கும்; அதன்மேலும் ஒன்றி ரண்டு

நிகழ்ந்தாலும் நிகழ்ந்திருக்கும்; பகையும் போற்ற இன்றிருக்கும் அரசுசெயும் நன்மை மட்டும்

எண்ணுக்குள் அடங்காமல் நீண்டி ருக்கும்.