பணிபுரியும் அலுவலர்கள் இயற்கை எய்தின்
படுதுயரில் அவர்குடும்பம் விழா வண்ணம் அணுகியதன் தலைவிதியை அழித்துக் காக்க
அரியதொரு விதியெழுதும் அரசு கண்டோம்; மணிவிழியின் ஒளிமயங்கிக் கலங்கி நொந்து
மாற்றரிய வழியின்றித் தவித்து நிற்போர் அணியணியாய் வந்துவிழி பெற்றுச் செல்ல
அவர் தமக்கு வழிகாட்டும் அரசு கண்டோம்.
தலையிலொரு முழத்துணியைச் சுற்றிக் கட்டித்
தனதிடையில் சிறுகந்தல் இறுகச் சுற்றி உலையிலெழுங் காற்றெனவே மூச்சு வாங்க
உடல்பருத்த மாந்தரையும் ஏற்றி வைத்துத் தலையிருந்து கால்வரையும் வியர்வை சிந்தி
தனிமனிதன் வண்டியினை இழுத்துச் செல்லும் நிலையினியும் ஏனென்றால், படைப்போன் இந்த
நிலைஎழுதி விட்டானென் றுரைக்கக் கேட்டோம்.
விதியென்று சொல்வதெலாம் சோம்பி நிற்பார்
வீண்பேச்சு, படைத்தவற்குப் பழியும் ஆகும்; மதிகொண்டு சிந்தித்துத் துயரம் தீர்க்க
மாற்றொன்று காண்பதுதான் ஆள்வோர் செய்கை; அதுவின்றேல் அரிய னைஏன்? தாழ்வு பெற்ற
அவர் தமக்குங் கைகொடுப்போம் என்று ணர்ந்து மிதிவண்டி நல்கிஅவர் துயர்கு றைத்து
மீட்சிதரத் துணைநிற்கும் அரசு கண்டோம்.