பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் உயர்க எழில் முல்லை

முல்லைச் சரத்துக்கு வெள்ளி விழாவென்னும் சொல்லைச் செவிமடுத்தேன் சொக்கிநின்றேன் - புல்லிதழை வேட்டலையும் கூட்டத்துள் வெள்ளிவிழா நாள்வரையில்

நாட்டியவன் யாரென்றேன் நான்.

முல்லைச் சரந்தொடுப்பான் முத்தமிழ்க்குத் தீங்குவரின் சொல்லிற் சரந்தொடுப்பான் தூயனவன் - நல்லநல்ல பாட்டுந் தொடுத்திருப்பான் பாவேந்தின் பொன்னடியான் நாட்டினன்காண் என்றார் நயந்து.

பொன்னடியான் வாழ்கஎனப் பூரிப்பால் நான்மொழிந்தேன் பின்னடையான் ஆள்வினையைப் பேணிநின்றேன் - நன்னடையான் என்றும்உயர்க எழில்முல்லைச் சரமென்றேன்

ஒன்றும் உணர்வால் உவந்து.

(முல்ல்ைச்சரம் இதழுக்கு வெள்ளி விழாக்கண்ட வாழ்த்து)