பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத் தமிழ்க் கழக வாழ்த்து

கரும்பூறும் சாறுநிகர் தமிழைக் காக்கும்

கருத்துடன்முத் தமிழ்க்கழகம் இங்குக் கண்டீர்; நரம்பேற உணர்வூட்டி, அறிவும் ஊட்டி,

நன்மானம், பகுத்தறிவுச் சுடருங் காட்டிச் கரும்பாக உழைக்கின்றிர் வாழ்த்து கின்றேன்;

சொல்வேந்தன் எங்குலத்துத் தலைவன் பேரால் அரங்கேறி விழாவெடுக்க முயல்வீர்! உம்மை

அன்பூறும் செந்தமிழால் வாழ்த்து கின்றேன்.

(25-08-1979-ஆம் நாள், பெங்களுர் உலகத் தமிழ்க் கழகக் கிளையில் நடைபெற்ற பாவேந்தர் விழாப் பாட்டரங்கில் தலைமையேற்ற பொழுது, உலகத் தமிழ்க் கழகத்தை வாழ்த்திப் பாடியது)