பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


நோக்கி இழுப்பதுபோல, வேதனையும் விசாரமும் அடைந்து வாழ்க்கையையே நரகமாக்கிக் கொள்கின்றனர்.

இறுதியாக கணவன்மார்களுக்கு ஒரு வார்த்தை! உங்கள் உயர்ந்த லட்சியத்தை உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள். அதற்குரிய முயற்சியிலேயே நில்லுங்கள். ஆதரவையும் பெற்றுக்கொள்ளுங்கள் அவளுடன் லட்சியப்பயணம் செல்லுங்கள். சுறுசுறுப்பான மூளை சொர்க்கத்தின் வழிகாட்டி, சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்பார்களே, அதுபோல நல்நோக்கும் நேர்மையான உழைப்பும் உள்ள கணவனை நிச்சயம் மனைவி நேசிப்பாள். துணையாக இருந்து தூணாக நின்று உதவுவாள். தேனாக விருந்தளிப்பாள். மனைவி மனங்கலந்து விட்டால் மகிழ்ச்சிக்குக் குறைவேது! தானே தனக்குத் தலைவனும் என்ற பாடல் போல, தானே தனக்குரிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தெரிந்தவனே தலைவன்! அவனே நல்ல கணவன் என்றார் உலகநாதர்.

நானும் தலைவனாக இருப்பேன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் வாசு கூறினான்.

தனது முயற்சியில் வெற்றி பெற்றதாக உலகநாதர் மகிழ்ந்தார். தன் தாயாரை நோக்கி, தன் முடிவை சொல்ல வாசு வீட்டிற்குள் விரைந்தான்.

'மனம் போல் வாழ்க என்று உலகநாதனின் மனம், வருங்காலத் தம்பதியர்களை வாழ்த்தியது.