பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மனே விளக்கு

தாய் இப்படியெல்லாம் நினைத்து ஏங்கிளுள். பாலை நிலமாயினும் அங்கே இன்பம் தரும் காதலன் உடன் செல்கிருன் என்பதை அவள் நினைக்கவில்லை. புலிக்கும் தன் மனைவியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்போது அறிவுடைய காதலன் ஒருவன் பின் சென்ற அக் காதலியை அவன் பாதுகாத்து நலம் செய் வான் என்பதை நினைக்கும் அளவுக்கு அவள் உள்ளம் விரியவில்லை. காந்தள். தீந்தாலும், அழல் அவிர்ந்தாலும், புலி கொலை சூழ்ந்தாலும் இத்தனைக்கும் இடையிலே அந்தப் பாலை நிலத்திலும் ஆண் பெண் உறவிலே தோற் றும் அற்புதமான அன்பு ஒளி விடுவதை அவள் தெரிந்து கொள்ளவில்லை. ஈன்று சோர்ந்திருந்த பெண் புலிக்கு இரை தேடி நிற்கு ம் ஆண் புலியின் உள்ளத்திலே அந்த அன்பு சுடர்வதை அவள் நினைத்தாளா? புலியின் கொடுமையையே நினைத்தாள். அதன் அன்பை நினைக்கவில்லை. வழியின் சிறுமையையே நினைத்தாள்: துணையின் பெருமையைச் சிந்திக்கவில்லை. மகள் உடம்பின் மென்மையையே நினைவு கூர்ந்தாள். அவள் காதலின் உரத்தை உணரவில்லை. தன் அணைப்புத் தளர்ந்ததற்கு மகள் வருந்தியதை எண்ணி ஏங்கிளுள். தன் தலைவனது இன்ப அணைப்பிலே இன்னல்களை மறந்து செல்வாள் என்பது அவள் பேதை நெஞ்சிற் புலப்படவில்லை! ஆகவே அவள் வருந்திப் புலம்புகிருள்.

கின்ற வேனில் உலந்த காந்தள் அழல் அவிர் நீள்.இடை நிழல்இடம் பெருஅது, ஈன்றுகால் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென, மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய புலிபார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி யாங்குவல் லுருள்கொல் தானே? யான்தன் வனங்தேந்து இளமுலை நோவ கொல்என நினைந்துகைக் நெகிழ்ந்த அனைத்திற்குத் தான்தன் பேர்அமர் மழைக்கண் ஈரிய கலுழ