1.02 மனோஹரன் (அங்கம்.8
நான்காவது காட்சி
இடம்-மஹாராஜாவின் கொலு மண்டபம். காலம்-மாலை
புருஷோத்தமன் வசந்தசே னையுடன் சிம்மாதனத்தில்
வீற்றிருக்கிறார்: மந்திரிகள், பிரதானிகள் முதலானோர் புடைசூழ்ந்திருக் கின்றனர். -
வசந்தன், விகடன், அமிர்தகேசரி ஒருபுறம் உட்கார்ந்திருக் கின்றனர்.
மற்றொருபுறமாக ரணவீரசேது முதலானோர் உட்கார்ந்
.திருக்கின்றனர், ராஜப்பிரியன் சிம்மாதானத்திற்கு எதிரில் நிற்கிறான்.
ராஜப்பிரியா, எதற்காக அவன் என்னைப் பார்க்க விரும்புகிறான்?
ரா : அது அவர் வந்து நேரிற் காணும்பொழுது தெரிகிறது.
மஹாராஜா, எட்டியாவது சீக்கிரம் காவலாளிகட்கு உள்ளே விடும்படி உத்தரவு செய்யும். இல்லாவிடின் உண்மையைக் கூறுமிடத்து அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு வருவார், அவ்வளவுதான்!
வணை : ; மஹாராஜாவின் காதில் ஏதோ ரகசியமாய்க் கூறு
கிறாள்.)
அப்படியல்ல. ராஜப்பிரியா, அப்படி மனோஹரன் என்னைக் காணவேண்டுமென்றால் நமது அரண்மனைச் சேவகர்களைக் கொண்டு இரும்புச் சங்கிலிகளால் கட்டிக் கொண்டு வரும் பட்சத்தில் காண்கிறேன். இல்ல விட்டால் பார்க்கமாட்டேன். .
prtr : (ஒரு புறமாக ஏன்? மஹாராஜாவுக்குப்பயமாய் இருக்
கிறது போல் காண்கிறது!-மஹாராஜா, இதென்ன யோசனை? மனோஹரரையா இரும்புச்சங்கிலிகளாற் கட்டிக் கொண்டு வரும்படி கூறுகிறீர்! என்ன யுக்தி: அதைவிட ராஜகேசரியை தாமரை நூலினாற் கட்டிக்