காட்சி.3) மனோஹரன் 24
அ :
அம்மனி, ஈஸ்வரனுடைய கிருபையினாலும், என் குரு வின் கடாட்சத்தாலும் நமது இளவரசருக்குக் கண்டிருக் கிற வியாதியைச் இக்இரத்தில் தீர்த்துவிடுவேன்-இது பித்தத்தைச் சார்ந்த வியாதிஎன்னா ஐயா! எனக்கு பயித்தியமா புடிச்சிப்போச்சி?
வசந்தா! பேசாமல் இரு சற்று! எனக்குக் கோபம் வரும்: படி செய்யாதே!
அம்மணி, என்னுடைய கை வல்லபம் இங்கே தெரியாது.
ஆமாம், இங்கே என்னமா தெரியும்? அங்கே போனவங் களே கேட்டா தெரியும்! என்விடத்திலே இந்த பித்தத்திற்கு ஒரு மாத்திரை இருக் கிறதுங்கோஅந்த மாத்திரெ சாப்பிட்டவுடனே வைகுண்ட யாத திரை தானுங்கோ! .
இல்லை, ஐயா, அப்படியல்ல. அந்த மாத்திரையை மூன்றுவேளை புசித்தால் அப்புறம் மருந்தே சாப்பிட வேண்டியதில்லை.
வாஸ்தவம், முனுவேளெ சாப்பிட்ட பிற்பாடு. அப்றம் மருந்து என்னாத்துக்கு? ஆளே பூட்டா அப்றம் மருந் தெங்கே சாப்பிட்றது? சந்தேகமில்லை!
சந்தேகமில்லை!
விக... ! நீ பேசாமலிருக்கமாட்டாயா?
இல்லை, அம் ம ணி, பேசாமலிருக்கிறத்துக்குத்தான் மாத்திரெ சொல்றாரே எங்க அண்ணா!
ராஜபத்தினி, இதே மாதிரியாக எங்கள் ஊரில் ஒரு வருக்கு வியாதி கண்டிருந்தது நாலைந்து மாதங்களுக்கு முன்பாக, அனேக வைத்தியர்கள் வந்து பார்த்து அசாத்தியமென்று கைவிட்டார்கள். பிறகு நான் போய் இந்த மாத்திரையை மூன்று வேளை கொடுத்தேன்,போய் விட்டது. - --