|காட்சி-4) மஞேஹரன் 형
LÊ 3
Gluer :
யாக வாழ். நீ யாராகவிருந்தபோதிலும் இனி இந் நாட் டெல்லைக்குளிராதே, இருப்பாயாயின் உன் உயிருக்குக் கெடுதி நேரிடும்,
அடே பாதகா யாருடைய உயிரைப் போக்கப் பார்த் தனையோ அவர்களுடைய கருணையினால் உன் உயிர் தப்பினை இனிமேலாவது இம்மாதிரியான தவறு செய்யாதே, போ.
நீயேன் இவ்வேலையில் கையிட்டுக்கொண்டாய்? நாம் கள் உனக்கென்ன தீங்கு செய்தோம்? நீ யார் ? அம்மணி, எனதுயிரைக் காப்பாற்றினீர்கள்! இதை நான் மறவேன் நான் சந்நியாசியன்று, பெளத்தாயணன்!
எல்லோரும் : பெளத்தாயணன்!
uெள் :
ta ;
பெள :
ஆம், வசந்தசேனையினுடைய ஏவவினால் இத்தொழிற்கு உடன்பட்ட பெளத்தாயணன் நான்!
ஆ! அப்படியா சமாசாரம் ?
(பெளத்தாயணன் தலையைச் சேதிக்க உடைவாளை வீசுகிறான். பத்மாவதி அவனைத் தடுக் கிருள்.)
மனோஹரா, இவனுக்கு நான் உயிர்ப் பிச்சை தந்தபின் நீ கொல்லலாகாது; விட்டுவிடு, இவன் போகட்டும்விட்டுவிடு என் சொற்படி
ஆம்!-சீ! அற்பனே, பிழைத்துப்போ! உன்னைக் கொல் வதில் என்ன பயன்? ஆந்த வசந்தசேனையையல்லவோ கொல்லவேண்டும்
அம்மணி, இரண்டாம் முறை எனது உயிரைக் காத்தீர்!இளவரசே, இதை நான் என்றும் மறவேன்! உமக்கு ஒர் ஆபத்தில் எப்படியாவது நான் இறப்பதன்முன் உதவு கிறேன் பாரும்!-நான் போகுமுன் ஒன்று கூறுகிறேன். வசந்தசேனை உயிருடனிருக்குமளவும். உமது உயிருக்கு ஹாணிதான்! மறவாதீர்! |போகிறான்.)
அந்த வசந்தசேனையை இப்பொழுதே கொன்றுவிட்டு வருகிறேன். இதுவரையில் ஒரு காரணம் வேண்டுமே என்று பொறுத்திருந்தேன், இனி நான் ஒரு நொடியே னும் தாமதியேன்.