பக்கம்:மனோன்மணீயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 13 ஒரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவு கோலை வாங்கிக் கொண்டு தம் ஆச்சிரம் போயினர். ஜீவக வழுதிக்குச் சந்ததியாக மனோன்மணி என்னும் ஒரே புத்திரி தான் இருந்தனள். அவன் அழகிலும் நற்குண நற்செய்கை களிலும் ஒப்பற்றவள். அவளுக்கு அப்போது வயது பதினாறாக இருந்தும்,அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சும் போல யாதொரு பற்றும் களங்கமு. மற்ற நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்றதோழியாக இருந்தவள் வாணி. இவள் ஒழுக்கம் தவறா உளத்தள்: தனக்கு நன்றெனத் தெள்ளிதில் தெளிந்தவையே நம்புந் திறத்தள். அல்லனவற்றை அகற்றும் துணிபுடையவள். இவ் வாணி நடராஜனென்ற ஒர் அழகமைந்த ஆனந்த புருஷனை யறிய, அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப்படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்கு மாறாக இவ் வாணியினது பிதா மிகப் பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பல தேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குத் தன் மகளை மணம் புரியில் தனக்குச் செல்வமும் கெளரவமும் உண்டா மென்ற பேராசை கொண்டு அவ்வாறே அரசன் அநுமதி பெற்று விவாகம் நடத்தத்துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதாயிருந்தது. இச்சோகம் நீங்க மனோன்மணி பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையவளா பிருந்தாள். இவ்வாறிருக்கும் போது முனிவர் கோட்டை காண வந்த நாளிரவில் ஈடு மெடுப்புமற்ற சேரதேசத் தரசனாகியபுருடோத் தமவர்மனைப் பூருவகரும பரிபாகத் தால் மனோன்மணி கனாக்கண்டு மோஹம் கொள்ள அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச்சுரம் இன்ன தன்மைய தென்றுணராது வருந்தும் ஜீவகனுக்குத் தெய்வகதியாய்த்' தம் அறைக்குமறுநாட்காலமே வந்த முனிவர் மனோன்மணி நிலைமை காம சுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள் நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும், அதற்கு எவ்விதத்திலும் பொருத்தமுடையோன் சேரதேசத்துப் புருடோத்தமனே யெனவும் அவ்வரசனது கருத்தினை நன்குணர்ந்து இம் மணவினை எளிதில் முடிக்க வல்லோன் நடராஜனேயெனவு வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/15&oldid=856174" இலிருந்து மீள்விக்கப்பட்டது