பக்கம்:மனோன்மணீயம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. 75. 80. 85. 95. 100. ஐந்தாம் அங்கம் மூன்றாம் களம் 21 to மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்தநல் திரை நமக் கெத்தனை உதவி (திரைக்குப் பின் மறைந்து நிற்க: என்குலம் காக்க எனவருள் பழுத்துக் கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்! மனத்திறத் தாழ்ந்த மதிமந் திரிகாள்! எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்! ஒருமொழி கூறிட அனுமதி தருமின். ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே; பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே. எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம் எமர்காள் கள்ளமில் நும்மனோர் காப்பின் சிறப்பே. ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல், மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும்." ஈண்டுகாத் திடுவல் யாம் எனக்கடன் பூண்டதும் மதிகுல மருந்தாய் வாய்த்தனன் சிறுமி விதைபடும் ஆலென விளங்கினள் அவளைக் காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை சேர்த்தனன் என்பது தெரிவிiர் நீவிர். இன்று நாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம். ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை அப்படி அன்று நம் கற்பகச் சிறுகனி! தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின். இருந்திடச் சிறியள்; அபாயம்! தனியே பிரிந்திடப் பெரியள்; பிழை! அஃதன்றியும் லமுடி வெண் ணிக் குலையுநம் உளத்திற் லையத னாலோர் இயல்சமா தானம். ஆதலில் அரிய தற் காலத் தியல்பை யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும் தீமையும் நன்றாய்த் தெரித்து செப்புமின் ! குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? 1. జ్ఞణితవిగా 2. போலும்(உவம உருபு) 3. பொருத்தும் 4. கடுங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/213&oldid=856313" இலிருந்து மீள்விக்கப்பட்டது